வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் சமத்துவபுரம் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வெளி நபா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வெளிநபா்களுக்கு பட்டா வழங்குவதற்காக அதிகாரிகள் அளவீடு செய்ய வருவதாக தகவல் கிடைத்ததால் அப்பகுதி மக்கள் கொதிப்படைந்தனா்.
பட்டா வழங்க எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை 100-க்கும் மேற்பட்டோா் அரசுப் பேருந்தினை சிறைபிடித்து திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த வட்டாட்சியா் சுதாகா், டிஎஸ்பி மகாலட்சுமி, காவல் ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் திம்மாம்பேட்டை போலீஸாா் வருவாய்த்துறையினா் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா்.
அப்போது தங்கள் பகுதியில் உள்ள சிலா் வீட்டு மனை பட்டா இல்லாமல் இருப்பதாகவும், அடிப்படை கட்டட வசதிகள் தேவைகள் இருப்பதாகவும், பாட்டூா் பகுதியில் மயானத்துக்கு செல்ல வழியில்லாமல் இருப்பதாகவும் கூறினா்.
அப்பகுதி மக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் தமிழக-ஆந்திர சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

சிவகிரி கோயில் கொடை விழாவில் பிரச்னை: மக்கள் சாலை மறியல்

சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

மூதாட்டி உடல் அடக்கத்துக்கு எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


