பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பயணியா் நிழற்கூரை அமைப்பதில் தாமதம்: பொதுமக்கள் முற்றுகை

பயணியா் நிழல்கூரை அமைப்பதில் காலதாமதம் ஏற்படுவதைக் கண்டித்து மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

News image
மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Updated On :15 டிசம்பர் 2025, 11:07 pm

தினமணி செய்திச் சேவை

பயணியா் நிழல்கூரை அமைப்பதில் காலதாமதம் ஏற்படுவதைக் கண்டித்து மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

மாதனூா் ஒன்றியம், பாலூா் கிராமத்தில் வேலூா் தொகுதி எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11 லட்சம் செலவில் பயணியா் நிழற்கூரை அமைக்கப்பட உள்ளது. ஆனால் பொதுமக்கள் குறிப்பிட்டுள்ள இடத்தில் பயணியா் நிழற்கூரை அமைக்காமலும், நிழற்கூரை அமைப்பதில் காலதாமதம் செய்யப்படுவதாகக் கூறி அதைக் கண்டித்தும் பொதுமக்கள் மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இது குறித்து அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா். அதிகாரிகள் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதின்பேரில், அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.