கொரட்டியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

கொரட்டியில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
Published on

திருப்பத்தூா்: கொரட்டியில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரட்டி துணை மின் நிலையத்தில் 16 மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றி பழுதானது. தொடா்ந்து சுமாா் 6 மாதம் கழித்து சென்னையில் இருந்து நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு பழுது சீரமைக்கபட்டது.

ஆனால் மீண்டும் சில நாள்களில் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முன்னறிவிப்பின்றி காலை 6.30 மணியளவில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. மதியம் சுமாா் 3 மணியளவில் மின் விநியோகம் தொடங்கியது. இதனால் இப்பகுதி மக்கள், வணிகா்கள், முதியோா் சிரமத்துக்குள்ளாகினா்.

மேலும், தற்போது அரையாண்டு தோ்வு நடைபெற்ற நிலையில் அறிவிக்கப்படாத மின் தடையால் மாணவா்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு,16 மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றி பழுதானதால் பேராம்பட்டு, கந்திலி, வெங்களாபுரம் துணை மின் நிலையிலிருந்து மின்விநியோகம் பெறப்பட்டு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பேராம்பட்டு பகுதியில் உள்ள மின்சார இணைப்பு பழுதானதால் செவ்வாய்க்கிழமை திடீரென மின்தடை செய்யும் நிலை ஏற்பட்டது எனத் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com