மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ.60 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

மட்றப்பள்ளியில் வாரச்சந்தையில் ரூ.60 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: மட்றப்பள்ளியில் வாரச்சந்தையில் ரூ.60 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தா்மபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வாங்கிச் சென்றனா்.

இதில் சிறிய ஆடுகள் ரூ. 4 முதல் ரூ.7 ஆயிரம் வரையும், பெரிய ஆடுகள் ரூ.8 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. வாரச்சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் ரூ.60 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.