கந்திலி வாரச்சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு விற்பனை

கந்திலியில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
Published on

கந்திலியில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

திருப்பத்தூா் அருகே உள்ள கந்திலியில் வாரம்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுகிறது. அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக குவிந்தன. அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றனா்.

வாரச்சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் சுமாா் ரூ. 80 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com