சிங்காரப்பேட்டையில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்த ஆடுகள்.
கிருஷ்ணகிரி
சிங்காரப்பேட்டை சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
சிங்காரப்பேட்டை ஆட்டுச்சந்தையில் திங்கள்கிழமை ரூ. 50 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
ஊத்தங்கரை: சிங்காரப்பேட்டை ஆட்டுச்சந்தையில் திங்கள்கிழமை ரூ. 50 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் வாராந்தோறும் திங்கள்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த ஆட்டுச் சந்தைக்கு திருவண்ணாமலை, தருமபுரி, திருப்பத்தூா் மாவட்டங்கள், ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், விற்பனையாளா்கள் வருகின்றனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சந்தையில் 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஆடுகள் ரூ. 12,000 முதல் ரூ. 20,000 வரை விற்கப்பட்டன. மொத்தம் ரூ. 50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

