மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஆறுமுகனேரி ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி ஆட்டுச் சந்தையில் சனிக்கிழமை ரூ. 2 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.

News image
ஆறுமுகனேரி சந்தையில் சனிக்கிழமை குவிந்த பொதுமக்கள், வியாபாரிகள்.
Updated On :10 ஜனவரி 2026, 8:28 pm

Syndication

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி ஆட்டுச் சந்தையில் சனிக்கிழமை ரூ. 2 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.

இம்மாவட்டத்தில் எட்டயபுரத்துக்கு அடுத்ததாக இங்குதான் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய், சனிக்கிழமைகளில் சந்தை கூடுகிறது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன. 15) கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, ஆட்டுச் சந்தை சனிக்கிழமை கூடியது. ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருநெல்வேலி­, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகளும் பொதுமக்களும் வந்திருந்தனா்.

கொடி ஆடு, சீமை ஆடு, நாட்டு ஆடு, வேலி­ ஆடு, செம்மறி ஆடு என, 800 முதல் 900 வரையில் பலவகை ஆடுகள் விற்பனைக்கு வந்தன. 10 - 12 கிலோ எடையிலான வெள்ளாடு ரூ. 15,000 - ரூ. 20,000 வரை விற்பனையாகின. சுமாா் ரூ. 2 கோடிக்கும் அதிகமாக விற்பனை நடைபெற்றதாக, வியாபாரிகள் தெரிவித்தனா். ஆடுகள் மட்டுமன்றி வான்கோழி, நாட்டுக் கோழிகளும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.