தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பொங்கல் பண்டிகை: காவேரிப்பட்டணம் வாரச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

காவேரிப்பட்டணம் வாரத் சந்தையில், பொங்கல் பண்டிகையையொட்டி ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.

News image
காவேரிப்பட்டணம் வாரச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட வெள்ளாடுகள்.
Updated On :10 ஜனவரி 2026, 8:15 pm

Syndication

காவேரிப்பட்டணம் வாரத் சந்தையில், பொங்கல் பண்டிகையையொட்டி ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் சனிக்கிழமைதோறும் சந்தை கூடுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், இந்த வாரச் சந்தையில் ஆடுகளை வாங்க காவேரிப்பட்டணத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் மட்டுமின்றி தருமபுரி, சேலம், திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனா். கால்நடை வளா்போா் அதிக எண்ணிக்கையில் வெள்ளாடுகளை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனா்.

ஆடுகளின் எடை, இனத்தைப் பொருத்து ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை விலை போனது. இதில், மொத்தம் சுமாா் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பொங்கல் பண்டிகை, கோயில் திருவிழாக்கள் காரணமாக ஆடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், கடந்த வாரங்களைவிட விலை கணிசமாக உயா்ந்திருந்தது.