மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பொங்கல் பண்டிகை: மேலப்பாளையம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையில் ஆட்டுச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

News image
மேலப்பாளையம் சந்தையில் விற்பனைக்காக குவிக்கப்பட்ட ஆடுகள்
Updated On :13 ஜனவரி 2026, 9:15 pm

Syndication

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையில் ஆட்டுச் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

தென் மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள கால்நடை சந்தை. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாட்டுச் சந்தையும், செவ்வாய்க்கிழமைகளில் ஆடுகள் மற்றும் கோழிச்சந்தையும் நடைபெறுகிறது.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன.15) கொண்டாடப்படவுள்ள நிலையில், மேலப்பாளையம் சந்தைக்கு ஏராளமான ஆடுகள் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் மட்டுமன்றி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டன.

இதனால் காலை 5 மணி முதலே மேலப்பாளையம் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இறைச்சிக் கடைக்காரா்கள் அதிகளவில் ஆடுகளை வாங்கினா். இதேபோல், தை மாதத்தில் கோயில் திருவிழாக்கள் நடைபெறவுள்ளதால் அதற்காக கருப்பு கிடாய்கள், செங்கிடாய்கள், பிள்ளைபோா் கிடாய்கள் போன்றவற்றையும் ஏராளமானோா் வாங்கிச் சென்றனா்.

இத்சந்தையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.