தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எஸ்.பி. அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

News image
Updated On :19 டிசம்பர் 2025, 12:38 am

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்தாா். ஏடிஎஸ்பி முத்துக்குமரன், டிஎஸ்பி-க்கள் சௌமியா(திருப்பத்தூா்), மகாலட்சுமி (வாணியம்பாடி), குமாா் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது எஸ்.பி. பேசியது: காவல் நிலையங்களுக்கு வரும் புகாா்தாரா்களிடம் இருந்து புகாா் மனுக்களை பெற்று விரைவாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் வழக்குகளை உடனடியாக விசாரணை செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காலதாமதம் இன்றி விரைவாக முடிக்க வேண்டும். 2024-ஆம் ஆண்டுக்கு முன்பு உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா். பின்னா், காவல் நிலையங்களில் கோப்புகளை பராமரிக்கும் முறைகள் குறித்து விளக்கமளித்தாா்.

இதில், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.