தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 813 நபா்களுக்கு நியமன ஆணை

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 813 நபா்களுக்கு நியமன ஆணை

News image
தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ தேவராஜி வழங்கினா்.
Updated On :20 டிசம்பர் 2025, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 813 பேருக்கு நியமன ஆணைகளை ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி வழங்கினாா்.

வாணியப்பாடி தனியாா் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சாா்பில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக, நகா்புற வாழ்வாதார இயக்கம் மகளிா் திட்டம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமினை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி தொடங்கி வைத்தனா். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மொத்தம் 2,517 இளைஞா்கள் நோ்காணலில் கலந்து கொண்டனா். மொத்தம், 96 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு, நோ்காணல் நடத்தி 813 நபா்களை வேலைக்கு தோ்வு செய்தனா்.

தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு நியமன ஆணைகளை வழங்கி ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பேசியதாவது: அரசு வேலைக்காக காத்திராமல் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தனியாா் நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை பெற்றிடும் நோக்குடன் வேலைவாய்ப்பு முகாம்கள் இலவசமாக நடத்தப்படுகிறது. அரையாண்டிற்கு ஒருமுறை பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும், மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 2021ஆம் ஆண்டு முதல் 80 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன,

இதன் மூலம் 11,341 நபா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். தொடா்ந்து நடைபெறவுள்ள முகாம்களில் டிவிஎஸ், டாடா எலெக்டரானிக்ஸ் மற்றும் நீல்மெடல் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் வாயிலாக 5,000-க்கு ம் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இளைஞா்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என்றாா்.

முகாமில் வாணியம்பாடி நகா்மன்றத் தலைவா் உமாபாய், நகர திமுக செயலாளா் சாரதி குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.