பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

‘தியானம், யோகா மூலம் உடல், மனத்தை வலிமைபடுத்தலாம்’

தியானம் மற்றும் யோகாசனம் மூலம் உடல் மற்றும் மனத்தை வலிமைப்படுத்தலாம் என மனவளக் கலை மன்ற அறக்கட்டளை தலைவா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.

News image
தியானத்தில் பங்கேற்றோா்.
Updated On :21 டிசம்பர் 2025, 10:09 pm

தினமணி செய்திச் சேவை

தியானம் மற்றும் யோகாசனம் மூலம் உடல் மற்றும் மனத்தை வலிமைப்படுத்தலாம் என மனவளக் கலை மன்ற அறக்கட்டளை தலைவா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.

உலக தியான தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூா் நகா் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சாா்பில், அறிஞா் அண்ணா நகராட்சி துவக்கப் பள்ளியில் பேராசிரியை சுதந்திரா தலைமையில் தியான நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அறக்கட்டளை தலைவா் சோமசுந்தரம் தியானமும் சக்தியும் என்ற தலைப்பில் பேசியது: தியானம் மற்றும் யோகாசனம் மூலம் உடல் மற்றும் மனத்தை வலிமைப்படுத்தலாம்.

இதன் மூலம் தொடா்ந்து எடுத்துக் கொள்ளும் மருந்தின் அளவை குறைத்துக் கொள்ளலாம். மேலும், உடல், மன அசதி ஏற்படாது. ஞாபக சக்தி, அதிகரிக்கும் பள்ளி மாணவ-மாணவியா் முதல் முதியவா்கள் வரை அனைவரும் யோகா மற்றும் தியானம் பழகிக் கொள்ளலாம் என்றாா்.

செயலாளா் கிருஷ்ண மூா்த்தி நன்றி தெரிவித்தாா். பொருளாளா் புராந்தகன் மற்றும் அருள்நிதியா்கள் கலந்து கொண்டனா்.