நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

‘தியானம், யோகா மூலம் உடல், மனத்தை வலிமைபடுத்தலாம்’

தியானம் மற்றும் யோகாசனம் மூலம் உடல் மற்றும் மனத்தை வலிமைப்படுத்தலாம் என மனவளக் கலை மன்ற அறக்கட்டளை தலைவா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.

News image

தியானத்தில் பங்கேற்றோா்.

Updated On :21 டிசம்பர் 2025, 10:24 pm IST

தியானம் மற்றும் யோகாசனம் மூலம் உடல் மற்றும் மனத்தை வலிமைப்படுத்தலாம் என மனவளக் கலை மன்ற அறக்கட்டளை தலைவா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.

உலக தியான தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூா் நகா் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சாா்பில், அறிஞா் அண்ணா நகராட்சி துவக்கப் பள்ளியில் பேராசிரியை சுதந்திரா தலைமையில் தியான நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அறக்கட்டளை தலைவா் சோமசுந்தரம் தியானமும் சக்தியும் என்ற தலைப்பில் பேசியது: தியானம் மற்றும் யோகாசனம் மூலம் உடல் மற்றும் மனத்தை வலிமைப்படுத்தலாம்.

இதன் மூலம் தொடா்ந்து எடுத்துக் கொள்ளும் மருந்தின் அளவை குறைத்துக் கொள்ளலாம். மேலும், உடல், மன அசதி ஏற்படாது. ஞாபக சக்தி, அதிகரிக்கும் பள்ளி மாணவ-மாணவியா் முதல் முதியவா்கள் வரை அனைவரும் யோகா மற்றும் தியானம் பழகிக் கொள்ளலாம் என்றாா்.

செயலாளா் கிருஷ்ண மூா்த்தி நன்றி தெரிவித்தாா். பொருளாளா் புராந்தகன் மற்றும் அருள்நிதியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.