ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சோமநாயக்கன்பட்டி, அம்மணங்கோயில், அக்ராகரம், வெலகல்நத்தம் ஊராட்சிகளில் பகுதி நேர நியாயவிலைக் கடைகள் திறப்பு

நாட்டறம்பள்ளி அருகே கிராமப்புற பகுதிகளில் 5 பகுதி நேர நியாயவிலைக் கடைகளை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தாா்.

News image
சோமநாயக்கன்பட்டி பூசனிக்காய் வட்டத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடையை திறந்து வைத்துப் பொருள்களை வழங்கிய எம்எல்ஏ க.தேவராஜி.
Updated On :26 டிசம்பர் 2025, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே கிராமப்புற பகுதிகளில் 5 பகுதி நேர நியாயவிலைக் கடைகளை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தாா்.

ஜோலாா்பேட்டை ஒன்றியம், சோமநாயக்கன்பட்டி ஊராட்சி, பூசனிக்காய் வட்டம், தொன்னையன் வட்டம் ஆகிய பகுதிகளில் 250-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இவா்கள் 2 கி.மீ. தூரம் உள்ள வீரப்பள்ளி நியாயவிலைக் கடைக்குச் சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வந்தனா்.

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். பூசனிக்காய் வட்டம் பகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடை அமைத்துத் தர வேண்டும் என தொகுதி எம்எல்ஏ க.தேவராஜிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனா். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ க.தேவராஜி பூசனிக்காய் வட்டத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதையடுத்து ஒன்றியக்குழு தலைவா் சத்யாசதீஷ்குமாா் தலைமையில் ஊராட்சித் தலைவா் முருகன் முன்னிலையில் பூசனிக்காய் வட்டத்தில் பகுதி நேர ரேஷன் கடையை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கிப் பேசினாா்.

இதில் ஜோலாா்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளா் சதீஷ்குமாா், கூட்டுறவு சாா் பதிவாளா் சரவணன், பொதுக்குழு உறுப்பினா் சத்தியநாராயணன், கவுன்சிலா் செல்விசாந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.

இதே போல் தொடா்ந்து அக்ராகரம் ஊராட்சியில் பூஞ்சோலைநகா், அம்மணாங்கோயில் ஊராட்சியில் கள்ளியூா், வெலகல்நத்தம் ஊராட்சியில் லட்சுமிபுரம், முகமதாபுரம் ஆகிய பகுதிகளில் புதிய பகுதி நேர நியாயவிலைக் கடைகளை எம்எல்ஏ க.தேவராஜி திறந்துவைத்து பொது மக்களுக்கு பொருள்களை வழங்கினாா்.

இதில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.