ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு

ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டுகுட்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதி 1-இல் புதிதாக திறக்கப்பட்டுள்ள பகுதிநேர நியாயவிலைக் கடையில் பொருட்கள் விற்பனை

News image
பொங்கல் பரிசுத்  தொகுப்பு  வழங்கிய எம்  எல் ஏ  ஜெ.எல். ஈஸ்வரப்பன்
Updated On :9 ஜனவரி 2026, 11:25 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டுகுட்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதி 1-இல் புதிதாக திறக்கப்பட்டுள்ள பகுதிநேர நியாயவிலைக் கடையில் பொருட்கள் விற்பனை தொடக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன் முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் பி.டி குணாளன் வரவேற்றாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

இந்த விழாவில் திமுக நகர செயலாளா் ஏ.வி.சரவணன் , அரசு பணியாளா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.