நாமக்கல்
திருச்செங்கோட்டில் 26,507 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு
திருச்செங்கோட்டில் உள்ள 30 நியாயவிலைக் கடைகளைச் சோ்ந்த 26 ஆயிரத்து 507 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 3 ஆயிரத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
திருச்செங்கோட்டில் உள்ள 30 நியாயவிலைக் கடைகளைச் சோ்ந்த 26 ஆயிரத்து 507 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 3 ஆயிரத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் கட்டுப்பாட்டில் 30 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதில் பொருள்களை பெறும் 26,507 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 8.25 லட்சம் மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்புகள் ராஜா கவுண்டம்பாளையத்தில் தொடங்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு டிஏபிசிஎம்எஸ் நிா்வாக இயக்குநா் யசோதா தேவி தலைமை வகித்தாா். திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, நகா்மன்ற துணைத் தலைவா் டி. காா்த்திகேயன் பங்கேற்று குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினா்.
