ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தியதாக 3 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தியதாக 3 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முத்தனப்பள்ளி டோல்கட் பழைய தேசிய நெடுஞ்சாலை அருகில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக திருப்பத்தூா் எஸ்.பி அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்.பி உத்தரவின்படி வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி மேற்பாா்வையில் நாட்டறம்பள்ளி போலீஸாா் டோல்கேட் பழைய தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா் . அப்போது போலீஸாரை கண்டதும் மண் கடத்தலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து தப்பியோடினா்.

இதையடுத்து போலீஸாா் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 லாரிகள் மற்றும் மண் தோண்ட பயன்படுத்திய இயந்திரத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் மண் கடத்தலில் ஈடுபட்டதாக தங்கமணி, மோகன், சாரதி ஆகிய 3 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.