தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மினி பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மினி பேருந்து சக்கரத்தில் சிக்கி பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மினி பேருந்து சக்கரத்தில் சிக்கி பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த பூ வியாபாரி சாலம்மாள் (75). வாணியம்பாடியில் பூ வியாபாரம் செய்து விட்டு திங்கள்கிழமை ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்தாா். அப்போது பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த வெலதிகாமணிபெண்டா பகுதிக்கு செல்லும் மினி பேருந்தில் ஏற முயன்றாா். இதில் திடீா் நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி மினி பேருந்தின் பின்புறம் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநா் மோகன் என்பவரை கைது செய்தனா்.