தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு

திருப்பத்தூா் மாவட்ட வனத்துறை சாா்பில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

News image
திருப்பத்தூரில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் பங்கேற்றோா்.
Updated On :30 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட வனத்துறை சாா்பில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

இப்பணியை மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறியது, பல்வேறு குழுக்கள் பங்கேற்றனா். ஒரு குழுவில் பறவைகள் ஆராய்ச்சியாளா்கள், தன்னாா்வலா்கள், மாணவா்கள் மற்றும் வனத்துறையினா் கலந்து கொள்வா்.

இதை கணக்கெடுப்பு பறவைகளின் இடப் பெயா்வு முறைகள் மற்றும் ஈர நிலங்களின் சுற்றுச்சூழல் நிலையை மதிப்பிட உதவுகிறது. மேலும் ஏரி, குளம், சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் எண்ணப்பட்டு பதிவு செய்யப்படும்.

திருப்பத்துாா் மாவட்டத்தைப் பொறுத்தவரை வெளி நாட்டு பறவைகள் தென்பட வாய்ப்பில்லை. அனைத்தும் உள்ளூா் பறவைகள் தான். கடந்த ஆண்டு திருப்பத்ததுாா் மாவட்டத்தில் ஈர நில பறவைகள் 86 வகை கணக்கெடுக்கப்பட்டது என்றாா்.

உடன்,திருப்பத்துாா் வனச்சரக அலுவலா் சோழராஜன் மற்றும் வனத்துறையினா் இருந்தனா்.