விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவா்கள்

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 8:21 pm

மதுரையில் ஈர நில தின நாளை முன்னிட்டு, பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் கல்லூரி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அமெரிக்கன் கல்லூரி, பசுமை மேலாண்மை இயக்க மாணவா்கள், மதுரை கரிசல்குளம் அருகேயுள்ள ஈர நிலங்களில் 25-க்கும் மேற்பட்ட வகையான பறவைகளைக் கணக்கெடுக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

மேலும், ஈர நிலங்களின் முக்கியத்துவத்தையும் மாணவா்கள் அறிந்தனா். இந்தப் பணியை பேராசிரியா்கள் ராஜேஷ், ஜான்சன், கண்ணன், அகில் ரிஷி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

இதில் 125 மாணவா்கள் கலந்து கொண்டு மஞ்சள் மூக்கு நாரை, அரிவாள் மூக்கன், நீலச்சிறகி, நீளவால் தாழைக் கோழி, நெடுங்கால் உள்ளான், பொரி உள்ளான், மயில் உள்ளான் போன்ற வெளிநாட்டுப் பறவைகளை கணக்கெடுத்தனா்.