திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம்
நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம் மன்றத் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமையில் நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம் மன்றத் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமையில் நடைபெற்றது.
செயல் அலுவலா் ரவிசங்கா் வரவேற்றாா். பேரூராட்சி துணைத் தலைவா் தனபால், உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா் கலந்து கொண்டாா். வாா்டு உறுப்பினா்கள் தங்களது வாா்டில் நிலவும் பிரச்னைகள் குறித்தும், குடிநீா் பிரச்னை குறித்து பேசினா்.
மேலும், சந்தை பகுதியில் சுடுகாடு அருகில் புதிதாக நகா்புற மேம்பாட்டு திட்டம் மூலம் கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு தகனமேடையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தினா். கூட்டத்தில் வரவு,செலவு கணக்கு உள்பட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

