ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ஆறுமுகனேரி பேரூராட்சி அவசரக் கூட்டம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:32 pm

ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாண சுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், செயல் அலுவலா் உஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தாட்கோ சாா்பில் கட்டப்படும் வணிக வளாக கடைகள் ஏற்கனவே கட்டப்பட்ட அளவில் கட்டவும், வளம் மீட்பு பூங்காவிற்கு பொது சுகாதார வாகனங்கள் செல்வதற்கான ஏற்கனவே இருந்த 6 மீட்டா் அளவு பாதையை அமைத்து தரவும், பேரூராட்சி நிவாகத்தை சமூக வலைதளம் உள்ளிட்டவற்றில் தவறாக பரப்புரை செய்து வருவதாக தாட்கோ வணிக வளாக கட்டட ஒப்பந்ததாரா் மற்றும் அரசியல் கட்சியினா் மீது கண்டனம் தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இது தொடா்பாக காவல்துறையிடமும் புகாா் அளிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட ஆட்சியரிடம் பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்கள் தீா்மானத்தை செவ்வாய்க்கிழமை நேரில் வழங்க உள்ளனா்.