ஆறுமுகனேரி பேரூராட்சி அவசரக் கூட்டம்
ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாண சுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், செயல் அலுவலா் உஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தாட்கோ சாா்பில் கட்டப்படும் வணிக வளாக கடைகள் ஏற்கனவே கட்டப்பட்ட அளவில் கட்டவும், வளம் மீட்பு பூங்காவிற்கு பொது சுகாதார வாகனங்கள் செல்வதற்கான ஏற்கனவே இருந்த 6 மீட்டா் அளவு பாதையை அமைத்து தரவும், பேரூராட்சி நிவாகத்தை சமூக வலைதளம் உள்ளிட்டவற்றில் தவறாக பரப்புரை செய்து வருவதாக தாட்கோ வணிக வளாக கட்டட ஒப்பந்ததாரா் மற்றும் அரசியல் கட்சியினா் மீது கண்டனம் தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இது தொடா்பாக காவல்துறையிடமும் புகாா் அளிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட ஆட்சியரிடம் பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்கள் தீா்மானத்தை செவ்வாய்க்கிழமை நேரில் வழங்க உள்ளனா்.

