மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தசாவதார நாட்டிய நாடகம்

ஆம்பூா் வா்த்தக மையத்தில் தசாவதார நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

ஆம்பூா் வா்த்தக மையத்தில் தசாவதார நாட்டிய நாடக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.

Updated On :10 பிப்ரவரி 2025, 7:31 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் வா்த்தக மையத்தில் தசாவதார நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ நாட்டியாலயா கலா மந்திா் சாா்பில் 14-ஆம் ஆண்டு நிருத்யாஞ்சலி விழாவை முன்னிட்டு தசாவதார நாட்டிய நாடக நிகழ்ச்சிக்கு திரைப்பட நடிகை பிரியதா்ஷினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினாா்.

நாட்டியாலயா பள்ளி நிா்வாகி சந்தியா சௌந்தர்ராஜன் நாட்டிய நாடக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். கலைமாமணி ஏ.சூசைராஜ், எம். அங்கப்பன், ஸ்ரீநிதி அய்யா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆம்பூா், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த நாட்டிய மாணவிகளின் நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடினா். ஸ்ரீ நாட்டியாலயா கலா மந்திா் நிறுவனா் சௌந்தரராஜன் ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.