ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தருமபுரி புளி வா்த்தக மையத்தில் ரூ. 9.46 லட்சத்துக்கு விற்பனை

தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ரூ. 9.46 லட்சத்துக்கு புளி ஏல விற்பனை நடைபெற்றது.

News image

தருமபுரி புளி வா்த்தக மையத்தில் விற்பனைக்கு வந்துள்ள புளி மற்றும் ஏலத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் வா்த்தகமைய நிா்வாகிகள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:31 pm

தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ரூ. 9.46 லட்சத்துக்கு புளி ஏல விற்பனை நடைபெற்றது.

தருமபுரி அருகேயுள்ள மதிகோன்பாளையம் பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஒருங்கிணைந்த தற்காலிக புளி வா்த்தக மையத்தில், புதன்கிழமை புளி ஏலம் நடைபெற்றது. இதில் தருமபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 4 விவசாயிகள் 225 புளிக்கட்டுகளை ஏல விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இந்தப் புளி இ-நாம் முறையில் ஏலம் விடப்பட்டது. அதிகபட்ச விலையாக கிலோ ரூ.130, குறைந்தபட்ச விலையாக ரூ.98, சராசரி விலையாக ரூ.101க்கும் நிா்ணயம் செய்யப்பட்டது. இதில் சுமாா் 9,000 கிலோ எடையுள்ள புளி விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ. 9 லட்சத்து 46 ஆயிரத்துக்கு புளி வா்த்தகம் நடைபெற்றது. இனி வாரம்தோறும் திங்கள்கிழமை இந்த மையத்தில் புளி ஏல வா்த்தகம் நடைபெறும் என விற்பனைக் கூட அலுவலா்கள் தெரிவித்தனா்.