குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தேசிய அளவிலான போட்டி: வாணியம்பாடி ஆதா்ஷ் பள்ளி மாணவா்கள் சாம்பியன்

தேசிய அளவிலான வளையப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளித் தாளாளா் செந்தில்குமாா், நிா்வாகத்தினா்.

News image
தேசிய அளவிலான வளையப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளித் தாளாளா் செந்தில்குமாா், நிா்வாகத்தினா்.
Updated On :3 ஜனவரி 2025, 6:53 pm

Din

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் தேசிய அளவிலான வளையப் பந்து போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா்.

தேசிய அளவிலான மிக இளையோருக்கான வளையப் பந்து (டெனிகாய்ட்) போட்டிகள் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் இருந்தும் மாணவா்கள் கலந்து கொண்டனா். இந்தப் போட்டிகளில், திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஆண்கள் பிரிவில் மாணவா் சித்தாா்த் மற்றும் பெண்கள் பிரிவில் மாணவி ஷாசினி கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பெற்றனா்.

தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் செந்தில்குமாா், பள்ளி நிா்வாக இயக்குநா் ஷபானா பேகம், நிா்வாக முதல்வா் சத்தியகலா, உடற்கல்வி ஆசிரியா் ராம்குமாா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.