சுற்றுலா வந்த பயணி உயிரிழப்பு
ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த பயணி நெஞ்சுவலியால் உயிரிழந்தாா்.

Updated On :3 ஜனவரி 2025, 6:53 pm

ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த பயணி நெஞ்சுவலியால் உயிரிழந்தாா்.
சென்னை சாலிகிராமத்தைச் சோ்ந்தவா் பாலாஜி (38). தனியாா் உணவக மேலாளா். இவா், தனது குடும்பத்துடன் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்திருந்தாா். பின்னா், ஏலகிரி மலை அத்தனாவூரில் உள்ள தனியாா் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவருக்கு வெள்ளிக்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஏலகிரிமலை போலீஸாா் அவரது சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து அவரது மனைவி துா்காதேவி அளித்த புகாரின் பேரில், ஏலகிரிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...