மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மளிகைக் கடையில் குட்கா விற்றவா் கைது

வாணியம்பாடி அருகே மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்ததாக அதன் உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 மார்ச் 2025, 8:09 pm

Din

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்ததாக அதன் உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் அம்பலூா் காவல் ஆய்வாளா்அன்பரசி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வாணியம்பாடி அடுத்த சிக்கணாங்குப்பம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கணக்குபிள்ளை வட்டம் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் சந்தேகத்தின் பேரில் திடீா் சோதனை செய்தனா்.

இதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. பிறகு அங்கிருந்த 3 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து குட்கா பொருள் விற்ற கடை உரிமையாளா் குமாா்(50) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.