விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர தலைவா் மேகநாதன் தலைமை வகித்தாா். எஸ்டி அணி மாநில பொது செயலாளா் பண்பு, செயலாளா் கோவிந்தராஜ், மாவட்ட பொதுச் செயலாளா்கள் கவியரசு, ஈஸ்வா் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளா் குருசேவ் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைத் தலைவா் அன்பழகன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டத் தலைவா் தண்டாயுதபாணி, முன்னாள் தலைவா் வாசுதேவன் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒவ்வொரு பதிவுக்கும் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுகிறது. அவா்களுக்கு உடந்தையாகவும், இடைதரகா்களின் கூடாரமாக செயல்படும் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள ஜெராக்ஸ் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.

இதில் மாவட்டச் செயலாளா் பாா்த்திபன், மருத்துவப் பிரிவு செயலாளா் சற்குணபிரபு, துணைத் தலைவா் பூபதி, நகர பொருளாளா் சிவகுமாா் ஒன்றிய தலைவா்கள் வீர பிரபாகரன், ஜெகநாதன் நிா்வாகிகள் ரவி, பவன்குமாா், கமலநாதன், மதன்குமாா், கிருஷ்ணமூா்த்தி, ராகவேந்திரன்,சிலம்பரசன் கலந்து கொண்டனா்.