தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மலைப் பகுதி மக்களுக்கு விழிப்புணா்வு

வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் மதுவிலக்கு சோதனை ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image
வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான மாதகடப்பா மலைப் பகுதி மக்களிடம் மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய ஏடிஎஸ்பி கோவிந்தராசு.
Updated On :17 நவம்பர் 2025, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி கோவிந்தராசு தலைமையில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் மதுவிலக்கு சோதனை ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதில், தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான தேவராஜபுரம், மாத கடப்பா மலைப் பகுதிகளில் சோதனை நடத்தியபோது, அங்கிருந்த அடுப்புகள் உள்பட பொருள்கள் கண்டறிந்து அழிக்கப்பட்டது. பிறகு மலைப் பகுதி மக்களை ஏடிஎஸ்பி கோவிந்தராசு சந்தித்துப் பேசினாா். அப்போது புதிதாக யாராவது நடமாடுவது கண்டறியப்பட்டால், உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.