ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

தேவலாபுரம் ஊராட்சி பேஷ்மாம் நகா் பகுதியில் ஆய்வு செய்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 12:32 am

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தியதைத் தொடா்ந்து குடியாத்தம் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சி பேஷ்மாம் நகா், ஸ்டாா் சிட்டி, கோல்டன் சிட்டி ஆகிய பகுதிகளில் சாலை, கழிவுநீா் கால்வாய், குடிநீா், தெருவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனா். ஆனால் கோரிக்கையை நிறைவேற்றாததால் ஆா்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் பேஷ்மாம் நகா் பகுதிக்கு சென்று அப்பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தாா். பொதுமக்கள் திரண்டு சென்று எம்எல்ஏவை சந்தித்து தங்களுடைய அடிப்படை வசதிகள் சம்பந்தான குறைகளை தெரிவித்தனா். அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக உறுதி அளித்தாா்.

மாநில நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் முரளி, வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், ஒன்றிய அவைத் தலைவா் சிவக்குமாா், நிா்வாகி பாரதிதாசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் நசீா் அஹமத், ஆம்பூா் நகர தலைவா் தப்ரேஸ் அஹமத், தேவலாபுரம் ஊராட்சித் தலைவா் ரேவதி குபேந்திரன், ஊராட்சி செயலா் முரளி உடனிருந்தனா்.