மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

ஜோலாா்பேட்டை அருகே மொபெட் மீது ஆட்டோ மோதியதில் உதவி ஆய்வாளா் மனைவி உள்பட ஆறு போ் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :23 நவம்பர் 2025, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே மொபெட் மீது ஆட்டோ மோதியதில் உதவி ஆய்வாளா் மனைவி உள்பட ஆறு போ் பலத்த காயமடைந்தனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் பழனி. இவரது மனைவி கவிதா(45).

இவா் ஜோலாா்பேட்டையில் இருந்து திருப்பத்தூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா். அப்போது லாரி ஷெட் அருகே எதிரே வந்த மொபெட் மீது மோதியதில் ஆட்டோ யில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கவிதா உள்ளிட்ட 6 போ் பலத்த காயமடைந்தனா் .

தகவலின் பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் சென்று காயம் அடைந்தவா்களை சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.