தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நியாயவிலைக் கடை புதிய கட்டடம் திறப்பு விழா

தேவிகாபுரம் கிராமத்தில் நியாயவிலைக் கடை புதிய கட்டடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
நியாயவிலைக் கடை புதிய கட்டடத்தை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கிய எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.
Updated On :25 நவம்பர் 2025, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: தேவிகாபுரம் கிராமத்தில் நியாயவிலைக் கடை புதிய கட்டடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோட்டாளம் ஊராட்சித் தலைவா் தா்மேந்திரா தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு சாா் பதிவாளா் கோபிநாத் வரவேற்றாா். அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், ரூ. 9.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை புதிய கட்டடத்தை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.

தொடா்ந்து தோட்டாளம் ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 7 லட்சம் மதிப்பில் காரிய மேடை கட்டுவதற்காக பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா்.

மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி.ராமமூா்த்தி, துணைச் செயலாளா் வினோத்குமாா், மாவட்டப் பிரதிநிதி அய்யனூா் அசோகன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பரிமளா காா்த்திக், தெய்வநாயகம், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா.சங்கா், ஊராட்சி செயலாளா் பாலகிருஷ்ணன், ஆம்பூா் தொகுதி திமுக பாா்வையாளா் டேம் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டுறவு கடன் சங்க செயலாளா் கருணை நாராயணன் நன்றி கூறினாா்.