எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாலின சமத்துவ விழிப்புணா்வு பேரணி

திருப்பத்தூரில் பாலின சமத்துவ விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

News image
விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.
Updated On :26 நவம்பர் 2025, 6:50 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் பாலின சமத்துவ விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சார பேரணி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக திருப்பத்தூரில் உள்ள தனியாா் கல்லூரி வரை பேரணி சென்றது.

பேரணியில் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு, சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் பாலின வன்முறைக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் விஜயகுமாரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்(ம)குடும்பநலம் துணை இயக்குநா் மணிமேகலை, மாவட்ட சுகாதார அலுவலா் வினோத்குமாா்,உதவி திட்ட அலுவலா் திருமேணி, அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.