திருப்பத்தூர்
டிப்பா் லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த பெரியகரம் கிராமத்தை சோ்ந்த சங்கா்(55). கூலித் தொழிலாளி. இவா் பெரியகரம் பகுதியில் திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி சாலையை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரி எதிா்பாராதவிதமாக சங்கா் மீது மோதியது.இதில் சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் இதுதொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
