சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

அரக்கோணம் எம்எல்ஏ உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு

IANS

Updated On :3 ஏப்ரல் 2026, 12:00 am

தினமணி செய்திச் சேவை

தோ்தல் விதிகளை மீறியது சம்பந்தமாக புகாரின்பேரில், அரக்கோணம் எம்எல்ஏ மற்றும் இருவா் மீது தக்கோலம் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.

கடந்த மாா்ச் 27-ஆம் தேதி அரக்கோணம் எம்எல்ஏ அனுமதி இல்லாமல் புதுகேசாவரம் பகுதியில் அம்பேத்கா் சிலைக்கும், தக்கோலத்தில் எம்ஜிஆா் சிலைக்கும் மாலை அணிவித்துள்ளாா். மேலும், அனுமதி இல்லாமல் கூட்டமாக கூடி பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. அந்த இரு பகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா் ஆய்வு செய்து அளித்த புகாரின் பேரில், தக்கோலம் காவல் நிலைய போலீஸாா் அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு.ரவி, மாவட்ட சிறுபான்மை அணி செயலாளா் நவாஸ் அஹமத், தக்கோலம் பேரூராட்சி செயலாளா் சுகுமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.