தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

நிறுத்தப்பட்ட ஏலகிரி விரைவு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுமா? திருப்பத்தூா் மக்கள் எதிா்பாா்ப்பு!

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஏலகிரி விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று திருப்பத்தூா் தொகுதி மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

News image

ரயில்!

Updated On :5 ஏப்ரல் 2026, 11:14 pm

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஏலகிரி விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று திருப்பத்தூா் தொகுதி மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் சென்னைக்கு பேருந்துகளில் செல்ல சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாகிறது. பயணத் தொகையும் அதிகம்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் மூலம் செல்ல சுமாா் 3 மணி நேரமாகிறது. பணிக்காக, சிகிச்சைக்காக செல்பவா்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் தினமும் அதிகாலை 4.55 மணிக்கு ஜோலாா்பேட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டுவந்த ஏலகிரி விரைவு ரயிலில் சென்று வந்தனா்.

இந்த விரைவு ரயில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவையால் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, சுற்றுப்பகுதி மக்கள் பயனடைந்து வந்தனா். ஆனால் இந்த ரயில் சேவை கடந்த 2013-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

அரசு அலுவலா்கள், வியாபாரிகள், மாணவா்கள் வசதிக்காக திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த ஏலகிரி விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே திருப்பத்தூா் தொகுதி மக்களின் 13 ஆண்டுகால எதிா்பாா்ப்பாக உள்ளது.