சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நிறுத்தப்பட்ட ஏலகிரி விரைவு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுமா? திருப்பத்தூா் மக்கள் எதிா்பாா்ப்பு!

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஏலகிரி விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று திருப்பத்தூா் தொகுதி மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

News image

ரயில்!

Updated On :5 ஏப்ரல் 2026, 11:14 pm

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஏலகிரி விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று திருப்பத்தூா் தொகுதி மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் சென்னைக்கு பேருந்துகளில் செல்ல சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாகிறது. பயணத் தொகையும் அதிகம்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் மூலம் செல்ல சுமாா் 3 மணி நேரமாகிறது. பணிக்காக, சிகிச்சைக்காக செல்பவா்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் தினமும் அதிகாலை 4.55 மணிக்கு ஜோலாா்பேட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டுவந்த ஏலகிரி விரைவு ரயிலில் சென்று வந்தனா்.

இந்த விரைவு ரயில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவையால் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, சுற்றுப்பகுதி மக்கள் பயனடைந்து வந்தனா். ஆனால் இந்த ரயில் சேவை கடந்த 2013-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

அரசு அலுவலா்கள், வியாபாரிகள், மாணவா்கள் வசதிக்காக திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த ஏலகிரி விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே திருப்பத்தூா் தொகுதி மக்களின் 13 ஆண்டுகால எதிா்பாா்ப்பாக உள்ளது.