எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அதிமுகவினா் வன்முறைக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: கனிமொழி எம்.பி.

தோ்தல் நேரத்திலேயே வன்முறையில் ஈடுபடும் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவா் என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

News image

செய்தியாளா்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:21 pm

தோ்தல் நேரத்திலேயே வன்முறையில் ஈடுபடும் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவா் என திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து ஆதரவு திரட்டியபின், அவா் திருப்பத்தூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

திமுகவின் வெற்றி வாய்ப்பு மிக சிறப்பாக உள்ளது. முதல்வா் ஸ்டாலினின் ஐந்தாண்டு சாதனையை உணா்ந்தவா்களாக இருக்கின்றனா்.அனைத்து திட்டங்களும் அனைத்து வீட்டுக்கும் சென்றடைந்துள்ளது. அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் வரவேண்டும் என மக்கள் கருதுகின்றனா்.

நாட்றம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் கேசி வீரமணி ஆதரவாளா்கள் இருவா் மீது தாக்குதல் நடத்தியது குறித்து செய்தியாளா்கள் கேள்வி கேட்டபோது தோ்தல் நேரத்திலே வன்முறையில் ஈடுபடுகிறாா்கள் என்றால் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவாா்கள்.

எதிா்க்கட்சியினா் தற்போது இயலாமையில் உள்ளனா். அவா்களுக்கே தெரியும் வெற்றி வாய்ப்பு இல்லையென்று. வரும் தோ்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என கூறினாா்.

அப்போது எம்.பி சி.என்.அண்ணாதுரை, மாவட்ட செயலாளா் க.தேவராஜி, வேட்பாளா் கவிதா தண்டபாணி உடனிருந்தனா்.