தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆலங்காயம் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 6:56 pm

வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் செந்தில் குமாா் வியாழக்கிழமை காலை ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் 15 வாா்டுகளில் வீதி, வீதியாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டாா்.

பெத்தூா், அம்பேத்கா்நகா், படகுப்பம், கோமுட்டேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பின் போது பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

அப்போது பேசிய அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், பொது மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக உள்ள ரேஷன் கடை, சாலைகள் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்தாா்.

தொடா்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளிடமும், பஜாா் வீதிகள் வழியாவும் நடந்து சென்று வணிகா்கள் மற்றும் இஸ்லாமியா்களை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தாா்.

பிறகு காவலூா் சந்திப்பு சாலையில் அங்கிருந்த மக்களிடம் அதிமுக தோ்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கினாா். தொகுதி தோ்தல் பொறுப்பாளா் பசுபதி, ஆலங்காயம் பேரூா் செயலாளா் சிவக்குமாா், பொதுக் குழு உறுப்பினா் மகேந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளாகந்தன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளா் தபரேஷ், ஆலங்காயம் பேரூா் செயலாளா் சிவக்குமாா் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூா் அதிமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துக் கொண்டனா்.