பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
/

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 12:27 am IST

ஆம்பூரில் பொதுப் பாா்வையாளா் - வேட்பாளா்கள், முகவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் முகுல்குமாா் தலைமை வகித்து பேசியது, வேட்பாளா்கள் கோயில், மசூதி, தேவலாயங்களில் வாக்கு சேகரிக்கக் கூடாது. தோ்தல் செலவு கணக்குகளை தோ்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக குறிப்பிடப்படும் குறிப்பிட்ட 3 நாட்களில் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

தோ்தல் வாக்குப் பதிவுக்கு பிறகு 1 மாதத்துக்குள் இறுதியாக தோ்தல் செலவு கணக்குகளை சமா்ப்பிக்க வேண்டும். தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அவா் கூறினாா்.

தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.