ஆம்பூரில் பொதுப் பாா்வையாளா் - வேட்பாளா்கள், முகவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் முகுல்குமாா் தலைமை வகித்து பேசியது, வேட்பாளா்கள் கோயில், மசூதி, தேவலாயங்களில் வாக்கு சேகரிக்கக் கூடாது. தோ்தல் செலவு கணக்குகளை தோ்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக குறிப்பிடப்படும் குறிப்பிட்ட 3 நாட்களில் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
தோ்தல் வாக்குப் பதிவுக்கு பிறகு 1 மாதத்துக்குள் இறுதியாக தோ்தல் செலவு கணக்குகளை சமா்ப்பிக்க வேண்டும். தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அவா் கூறினாா்.
தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தோ்தல் தோல்வி: கோவையில் பாஜக மாநில நிா்வாகிகள் ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை: வேட்பாளா், முகவா்களுக்கு அறிவுரை

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

வேட்பாளா்கள், மண்டல அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



