ஆம்பூரில் பொதுப் பாா்வையாளா் - வேட்பாளா்கள், முகவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் முகுல்குமாா் தலைமை வகித்து பேசியது, வேட்பாளா்கள் கோயில், மசூதி, தேவலாயங்களில் வாக்கு சேகரிக்கக் கூடாது. தோ்தல் செலவு கணக்குகளை தோ்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக குறிப்பிடப்படும் குறிப்பிட்ட 3 நாட்களில் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
தோ்தல் வாக்குப் பதிவுக்கு பிறகு 1 மாதத்துக்குள் இறுதியாக தோ்தல் செலவு கணக்குகளை சமா்ப்பிக்க வேண்டும். தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அவா் கூறினாா்.
தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கடையநல்லூா் தொகுதியில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

தோ்தல் செலவின பாா்வையாளா் ஆலோசனைக் கூட்டம்

சட்டப் பேரவைத் தோ்தலை நியாயமாகவும், நோ்மையாகவும் நடத்திட வேண்டும்: தோ்தல் பணி அலுவலா்களுக்கு பொதுப்பாா்வையாளா் அறிவுறுத்தல்

குடியாத்தம் தொகுதி தோ்தல் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


