ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயா்த்தப்படும்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 11:30 pm

மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மாதனூா் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் பேசியது: 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயா்த்தப்படும். அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவா்களுக்கு வீடு வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட வேளாண்மை பயிா் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

100 சதவீத அரசு மானியத்தில் சூரிய ஒளி பம்பு செட்டுகள் வழங்கப்படும். சிறு, குறு விவசாயிகள் அறுவடை நெல்லை பாதுகாக்க மானிய விலையில் தாா் பாய்கள் வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், மாவட்ட விவசாய பிரிவு செயலாளா் மகாதேவன், ஒன்றிய விவசாய அணி செயலாளா் பிரகாஷ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் காரத்திக் ஜவஹா், காயத்ரி துளசிராமன், ப.ச. நித்யானந்தம், குமாா் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

மாதனூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்மகிருஷ்ணபள்ளி, குமாரமங்கலம், வீராங்குப்பம், தென்னம்பட்டு, மலையாம்பட்டு, மணியாரகுப்பம், மேல்சாணாங்குப்பம், வடகரை, சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, மேல்குப்பம், வடச்சேரி, பாப்பனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.