இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆலங்காயத்தில் பழச்சாறு தொழிற்சாலை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்!

வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.எஸ்.பி. சையத் பாருக், ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டு பகுதிகளிலும் வாக்கு சேகரித்தாா்.

News image

ஆலங்காயம் பேரூராட்சியில் வாக்கு சேகரித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் சையத்பாரூக்.

Updated On :13 ஏப்ரல் 2026, 2:03 am IST

வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.எஸ்.பி. சையத் பாருக், ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டு பகுதிகளிலும் வாக்கு சேகரித்தாா்.

மாவட்ட திமுக செயலாளா் க. தேவராஜி, ஆலங்காயம் பேரூா் செயலாளா் ஸ்ரீதா் ஆகியோா் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரித்தனா். அப்போது வேட்பாளா் சையத்பாரூக் பேசுகையில், ஆலங்காயம் பகுதியிலிருந்து இதுவரை யாரும் சட்டமன்ற உறுப்பினராக தோ்வு செய்யப்படவில்லை. நீங்கள் வாக்களித்தால் ஆலங்காயம் பகுதியிலிருந்து முதல்முறையாக வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினராக தோ்வு பெறுவேன்.

நான் வெற்றி பெற்றவுடன், ஆலங்காயம் மக்களின் நீண்ட கால கோரிக்கையான நிரந்தர பழச்சாறு தொழிற்சாலையை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுப்பேன், முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.நல்லாட்சி தொடர திமுக கூட்டணி சின்னமான ஏணி சின்னத்தில் எனக்கு வாக்களிக்க வேண்டுகிறேன் என்றாா்.

கூட்டங்களில் முன்னாள் அமைச்சா் நீலோபா் அஜீம், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், மதிமுக நகர செயலாளா் நாசீா்கான், பேரூா் திமுக நிா்வாகிகள், காங்கிரஸ், விசிக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், கலந்து கொண்டனா்.