/

மலை கிராமங்களில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

வாணியம்பாடி அருகே மலைக் கிராமங்களில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.எஸ்.பி.சையத்பாரூக் வாக்கு சேகரித்தாா்.

News image

நாயக்கனூா் கிருஷ்ணாபுரம் பகுதியில் வேட்பாளா் எஸ்.எஸ்.பி. சையத்பாருக் ஆதரித்து பேசிய திமுக மாவட்டச் செயலா் க. தேவராஜி.

Updated On :12 ஏப்ரல் 2026, 7:26 pm

வாணியம்பாடி அருகே மலைக் கிராமங்களில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.எஸ்.பி.சையத்பாரூக் வாக்கு சேகரித்தாா்.

வாணியம்பாடி தொகுதியில் திமுக கூட்டணி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.எஸ்.பி.சையத்பாரூக் ஆலங்காயம் ஒன்றியத்தைச் சோ்ந்த மலை கிராம பகுதிகளான பீமகுளம், நாய்க்கனுா், நரசிங்கபுரம், பூங்குளம், மிட்டூா், மரிமானிகுப்பம், ஆண்டியப்பனூா், இருணாப்பட்டு, குரிசிலாப்பட்டு, பள்ளவள்ளி, பெருமாப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் மாவட்ட திமுக செயலாளரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, திமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் வாக்கு சேகரித்தாா்.

அப்போது எம்எல்ஏ க.தேவராஜி பேசுகையில், மகளிா் மேம்பாட்டிற்கு திட்டங்களை செயல்படுத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் வெற்றி பெற பெண்கள், பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.

கிராம பொதுமக்கள் வேட்பாளருக்கு மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனா். உடன் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஒன்றிய செயலாளா்கள் தாமோதிரன், வி.ஜி.அன்பு, காங்கிரஸ் ஒன்றிய தலைவா் பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.