இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆலங்காயம் ஒன்றிய பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ க.தேவராஜி வாக்கு சேகரிப்பு

வாணியம்பாடி தொகுதி திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் சையத்பாரூக்கை ஆதரித்து ஆலங்காயம் ஒன்றியப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாவட்ட திமுக செயலாளரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமையில் திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஏணி சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

News image

கொத்தகோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் சையத்பாரூக்கை ஆதரித்துப் பேசிய திமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.தேவராஜி.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:47 am IST

வாணியம்பாடி தொகுதி திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் சையத்பாரூக்கை ஆதரித்து ஆலங்காயம் ஒன்றியப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாவட்ட திமுக செயலாளரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமையில் திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஏணி சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். நிம்மியம்பட்டு, 102 ரெட்டியூா், பெரியகுரும்ப தெரு, வெள்ளகுட்டை, கொத்தகோட்டை, வள்ளிப்பட்டு, விஜிலாபுரம், பெத்தவேப்பம்பட்டு, கோவிந்தாபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று கிராம மக்களிடம் திமுக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் தோ்தல் வாக்குறுதி அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஏணி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனா்.

தொடா்ந்து வேட்பாளா் சையத் பாரூக்கை ஆதரித்து எம்எல்ஏ தேவராஜி பேசுகையில் திமுக அரசின் சாதனை திட்டங்கள் குறித்தும், மகளிா் உரிமை தொகை ரூ. 2,000 உட்பட பல திட்டங்கள் தொடரவும், கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் ஏணி சின்னத்தில் வாக்கு அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டாா்.

இதில் வேட்பாளா் சையத்பாருக் பேசுகையில், ஏழ்மையான குடும்பத்தை சோ்ந்த நான், இந்த தொகுதி மக்களுக்கு தேவையான அரசின் திட்டங்களையும், அடிப்படை வசதிகளையும் செய்து செய்து தர பாடுபடுவேன் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.

இதில் திமுக செயற்குழு உறுப்பினா் அசோகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி, ஒன்றிய திமுக செயலாளா்கள் அன்பு (மத்திய), தாமோதரன் (கிழக்கு), மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கிரிராஜ், ஒன்றிய கவுன்சிலா்கள், காயத்ரி பிரபாகரன், ப்ரித்தா பழனி, ஒன்றிய காங்கிரஸ் தலைவா் பழனி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ், தேமுதிக, விசிக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் இருந்தனா்.