பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 5:46 am IST

திருப்பத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.

தலைமை தோ்தல் அலுவலரின் கடிதத்தின் பேரில், திருப்பத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலூா் மாவட்ட தோ்தல் இருப்பறையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள 100 கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசெளந்திரவல்லி அனைத்துக் கட்சி வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாா்வையிட்டாா்.

இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெய்சங்கா், வாக்கு எண்ணும் மையத்தின் கண்காணிப்பாளரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தணிகாசலம், தோ்தல் வட்டாட்சியா் திருமலை மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.