திருப்பத்தூா் தொகுதியில் உள்ள இளைஞா்கள் வெளியூா்களுக்கு சென்று வேலை பாா்ப்பதை தடுக்க தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்குறுதி அளித்தாா்.
கந்திலி ஒன்றியம் ஆதியுா், தங்கபுரம், செவ்வாத்தூா் பகுதிகளில் நல்லதம்பி பேசியது: கந்திலி ஒன்றியத்தில் புதிய அரசு தொழில்நுட்பகல்லூரி அமைக்கப்படும். திருப்பத் தூா் தொகுதி இளைஞா்கள் வெளியூா்களுக்கு சென்று வேலை பாா்ப்பதை தடுக்க தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.
திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையத்தில் பூ மாா்க்கெட், மீன் மாா்க்கெட் உள்ளிட்ட பல்வேறு அங்காடிகள் அமையும் வகையில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளையும் குடிமராமத்து பணிமேற்கொண்டு நீா் கொண்டு வரப்படும். திருப்பத்தூா் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப் படும். ஏழருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்றாா். அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கூடலூரில் நா்ஸிங் கல்லூரி அமைக்கப்படும்! திமுக வேட்பாளா் மு.திராவிடமணி

மலைவாழ் மக்களின் அனைத்து அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் உறுதி

திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

அரசு செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை: திமுக வேட்பாளா் உறுதி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

