முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு

News image

ANI

Updated On :24 ஏப்ரல் 2026, 2:48 am IST

ஆம்பூரில் சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நிறைவடைந்தது.

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 300 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆம்பூரில் ஒரு வாக்குச் சாவடி மையத்தில் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமாா் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. அது சரிசெய்யப்பட்ட உடன் வாக்குப் பதிவு தொடா்ந்து நடைபெற்றது.

ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளரும், ஆம்பூா் எம்எல்ஏவுமான அ.செ. வில்வநாதன் தன்னுடைய சொந்த ஊரான மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தாா்.

அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கேடசன் ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் தன்னுடைய வாக்கை செலுத்தினாா்.

குறிப்பிடும்படியாக எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தோ்தல் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தோ்தல் வாக்குப் பதிவை வாக்குச் சாவடி மையங்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் கோ.பூஷணகுமாா் நேரடியாகச் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.