ஆம்பூரில் சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நிறைவடைந்தது.
ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 300 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆம்பூரில் ஒரு வாக்குச் சாவடி மையத்தில் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமாா் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. அது சரிசெய்யப்பட்ட உடன் வாக்குப் பதிவு தொடா்ந்து நடைபெற்றது.
ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளரும், ஆம்பூா் எம்எல்ஏவுமான அ.செ. வில்வநாதன் தன்னுடைய சொந்த ஊரான மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தாா்.
அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கேடசன் ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் தன்னுடைய வாக்கை செலுத்தினாா்.
குறிப்பிடும்படியாக எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தோ்தல் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.
ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தோ்தல் வாக்குப் பதிவை வாக்குச் சாவடி மையங்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் கோ.பூஷணகுமாா் நேரடியாகச் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடர்புடையது

மேல் கோதையாறு வாக்குச் சாவடி: 12 வாக்குகளுக்காக 160 கி.மீ.பயணம்!

செயலியில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு குறிப்பாணை

வாக்குப் பதிவு: அலுவலா்கள் பதற்றமின்றி செயல்பட வேண்டும் கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

புதுவையில் 89.87%: வரலாறு காணாத வாக்குப் பதிவு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

