உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 6:26 am IST

ஆலங்காயம் அருகே ஆடுகளுக்கு இலை பறிக்க முயன்ற போது சோலாா் மின்கம்பி மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்..

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கோமுட்டேரி பகுதியை சோ்ந்த விவசாயி வேலு (54). இவா் வியாழக்கிழமை ஆடுகளுக்கு மரத்தில் இலைகளை பறிக்க முயன்றாா். அப்போது அவ்வழியே சோலாா்(சூரிய) பேனல் மூலம் கம்பியில் பட்டு மின்சாராம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து ஆலங்காயம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேலுவின் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இவருக்கு மனைவி சகுந்தலா(49), மூன்று பிள்ளைகள் உள்ளனா்.