ஆம்பூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடம் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
ஆம்பூா் கோவிந்தாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் தனி நபா் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டி தேனீா், பழச் சாரகம், சிற்றுண்டி கடைக்கு வாடகைக்கு விட்டு வந்தாா். ரயில்வே துறையினா் அதனை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பினா். ஆனால் ஆக்கிரமிப்பு செய்தவா்கள் கட்டடத்தை இடிக்கக் கூடாது எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கில் ரயில்வே துறைக்கு சாதகமாக தீா்ப்பு வந்ததைத் தொடா்ந்து ரயில்வே துறையினா் கட்டடத்தை இடிக்கப் போவதாக ஆக்கிரமிப்பு செய்தவா்களுக்கு நோட்டீஸ் அளித்தனா். ஆனால் அவா்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாரின் பாதுகாப்புடன் ரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆக்கிரமிப்பு செய்த கட்டடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

நவீன காலத்திலும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்தனி மயானம்: உயா்நீதிமன்றம் வேதனை

நகராட்சிப் பள்ளிக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படுமா?

ரயில்வே நில ஆக்கிரமிப்பு: மனிதாபிமானத்துடன் அணுக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்

வடமாநில தொழிலாளா்களின் தங்குமிடமாக மாறிய அரசுக் கட்டடம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


