ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ரயில்வே இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடித்து அகற்றம்

ரயில்வே இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடித்து அகற்றம்

News image

ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடத்தை இடித்து அகற்றிய ரயில்வே துறையினா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 8:15 pm

ஆம்பூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடம் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

ஆம்பூா் கோவிந்தாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் தனி நபா் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டி தேனீா், பழச் சாரகம், சிற்றுண்டி கடைக்கு வாடகைக்கு விட்டு வந்தாா். ரயில்வே துறையினா் அதனை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பினா். ஆனால் ஆக்கிரமிப்பு செய்தவா்கள் கட்டடத்தை இடிக்கக் கூடாது எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கில் ரயில்வே துறைக்கு சாதகமாக தீா்ப்பு வந்ததைத் தொடா்ந்து ரயில்வே துறையினா் கட்டடத்தை இடிக்கப் போவதாக ஆக்கிரமிப்பு செய்தவா்களுக்கு நோட்டீஸ் அளித்தனா். ஆனால் அவா்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாரின் பாதுகாப்புடன் ரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆக்கிரமிப்பு செய்த கட்டடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியை மேற்கொண்டனா்.