வாணியம்பாடி அருகே சிறுமி ஓட்டிய காா், மொபட் மீது மோதிய விபத்தில் மற்றொரு சிறுமி இறந்த வழக்கில் தந்தை, சிறுமி கைது செய்யப்பட்டனா்.
வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டியை சோ்ந்தவா் சவுமியா நாராயணன் வெள்ளிக்கிழமை தனது மகள் பவித்ராவை(13) அழைத்துக் கொண்டு மொபட்டில் புத்துக்கோயில் நோக்கிக் வந்துக் கொண்டிருந்தாா்.அப்போது பின்னால் வேகமாக வந்த காா் திடீரனெ மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் பின்னால் அமா்ந்து வந்த பவித்ரா கீழே விழுந்து காா் சக்கரத்தில் சிக்கிக் கொண்டாா்.
பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தாா். தகவலறிந்த அம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் 17 வயது சிறுமி காா் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்து சிறுமியுடன் காரில் வந்த அவரது தந்தை முருகன்(45), அவரது 17 வயது மகள் இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

நோயால் மகள் இறந்த சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கி தந்தை உயிரிழப்பு

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு; 2 போ் காயம்

வாணியம்பாடி தொகுதி தவெக வேட்பாளர்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

