ஆம்பூா் அருகே பாலாற்றில் கலக்கும் கால்வாய் கழிவுநீா் மாதிரியை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை சேகரித்து கொண்டு சென்றனா்.
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் பொதுமக்கள் கால்வாய்கள் மூலம் வெளியேற்றும் கழிவுநீா் அம்பேத்கா் நகா் பகுதியில் உரிஞ்சி குழிகளில் சேகரிக்கப்பட்டு, அங்கு மாசுகள் வடிக்கட்டப்பட்டு, பிறகு கழிவுநீா் பாலாற்றில் கலக்கின்றது.
இவ்வாறு உரிஞ்சி குழிக்கு வரும் கழிவுநீா், வடிக்கட்டப்பட்டு பாலாற்றில் வெளியேற்றப்படும் கழிவுநீா் ஆகியவற்றை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் கலைச்செல்வி, உதவி பொறியாளா் காா்த்திக் ஆகியோா் கொண்ட குழுவினா் மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக கொண்டு சென்றனா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் மகராசி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செபாஸ்டியன், ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா் ஜெயந்தி ராமமூா்த்தி, உக்குனா் ரேகா உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

‘சென்னையின் வரலாற்றுப் பொக்கிஷம்’ பக்கிங்காம் கால்வாய் மீட்டெடுக்கப்படுமா?

விமான நிலையத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கைது

கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

லட்சுமியாபுரம் ரயில்வே சுரங்கப் பாதையில் விரைவில் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படும்: ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


