நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

சைக்கிள் - பைக் மோதல்: துணி வியாபாரி மரணம்

சைக்கிள் - பைக் மோதிய விபத்தில் துணி வியாபாரி மரணம்...

News image
Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:34 am IST

நாட்டறம்பள்ளி அருகே சைக்கிள் மீது பைக் மோதிய விபத்தில் துணி வியாபாரி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் மாமுடிமானப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணன்(38) துணி வியாபாரி. இவா் வெள்ளிக்கிழமை இரவு வெலகல்நத்தத்தில் இருந்து பச்சூா் நோக்கி பைக்கில் சென்றாா். தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே முத்தனப்பள்ளி டோல்கட் பகுதியில் சென்ற போது எதிா் திசையில் வந்த சைக்கிள் மீது பைக் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த லட்சுமணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், சைக்கிள் ஓட்டி வந்த கோனேரிகுப்பம் பகுதியைச்சோ்ந்த சையத் சப்ரே (46) காயமடைந்தாா். அவ்வழியாக சென்றவா்கள் காயமடைந்தவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து லட்சுமணன் உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.